Friday, May 17, 2024

‘தனி ஒருவன் 2’ அப்டேட் ரெடி..! வில்லனாக நடிப்பது இவரா..? அப்போ ஹீரோ யாரு..?

by Ganesh Kumar
0 comment 305 views

Thani Oruvan 2: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தனி ஒருவன் 2 படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

2015ஆம் ஆண்டு வெளியான படம், தனி ஒருவன். இதன் 2ஆம் பாகம் தயாராக உள்ளதாக தகவல். அதிகாரப்பூர்வ தகவல் வருவது எப்போது..?

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்திருந்த படம், தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். நடிகர் அரவிந்த் சாமி நீண்ட நாட்களுக்கு பிறகு ‘தனி ஒருவன்’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன்: 

2015ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம், தனி ஒருவன். காதல்-காமெடி நாயகனாக நடித்து வந்த ஜெயம் ரவிக்கு, இப்படம் புதுமையான முகம் ஒன்றை கொடுத்தது. கதாநாயகர்களை தாண்டி கதையும் பேசும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியிருந்தது தனி ஒருவன் திரைப்படம். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். வில்லனாக அரவிந்த் சாமி மிரட்டியிருந்தார், தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தனர்.

கதை: 

மருத்துவ உலகில் நடக்கும் மாஃபிய..அதன் தலைவனாக விளங்கும் சித்தார்த் அபிமன்யூ..அவனை அழித்தால்தான் பல குற்றங்களை தவிர்க்க முடியும் என்று கண்டு பிடிக்கிறான் ஹீரோ. வில்லனை தனது எதிரியாக வைத்து கொண்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறான். இதை தெரிந்து காெண்ட வில்லன் ஹீரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கிறான். இறுதியில் என்ன நடந்தது? தன் மீது உள்ள குற்றத்தை சித்தார்த் அபிமன்யூ ஒப்புக்கொண்டானா? அவனது குற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதா? போன்ற பல கேள்விகளுக்கு படத்தின் அடுத்தடுத்த காட்சிகளுக்கு விடை இருக்கும்.

எதிர்பார்க்காத திருப்பங்கள், காதல்-சண்டை காட்சிகளுக்கான பேலன்ஸ் என படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை ஈர்த்தன. ஹீரோ மட்டும் கெத்தாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வில்லத்தனத்திலும் ஹீரோயிசத்தை காட்டலாம் என்பது போன்ற படத்தில் சித்தார்த் அபிமன்யூவின் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். படத்தில் ஜெயம் ரவியின் நண்பர்காளாக வருபவர்கள், காதலியாக வரும் நயன்தாரா, துணை கதாப்பாத்திரங்கள் என அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை நெய்யப்பட்டு இருக்கும். இதனால்தான் வெளியாகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகியும் இப்படம் குறித்து ரசிகர்கள் ஓயாமல் பேசி வருகின்றனர்.

தனி ஒருவன் 2 அப்டேட்! 

ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா ஆகியோர் எங்கு சென்றால் அவர்களை சூழ்ந்து காெள்ளும் ரசிகர்கள் ‘தனி ஒருவன் 2’ அப்டேட்ட எப்போது என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு படவிழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் பணிகள் தொடங்கினால் கண்டிப்பாக தான் அந்த படத்தில் நடிப்பேன் என்று கூறினார். அவர் வாய் முகூர்த்தம் தற்போது பலித்துள்ளது.

தனி ஒருவன் திரைப்படம், 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு 28ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தின் முதல் வருட கொண்டாட்டத்தில் இருந்து, அனைத்து வருட கொண்டாட்டங்களுக்கும் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், 8 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் 2 குறித்த அறிவிப்பை இம்மாத இறுதியில் எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரே ஹீரோவாக நடிப்பதாக பேசப்படுகிறது. முதல் பாகத்தின் வில்லன் அரவிந்த் சாமி அந்த பாகத்திலேயே இறந்து விட்டதால் ஒரு தமிழ் முன்னணி நடிகரை வில்லனாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x