சிவகார்த்திகேயனுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்.
பொலிட்டிகள் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளனர்.
விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார், மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படம் குறித்த கூடுதல் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ‘கஜினி’ ஹிந்தி வெர்ஷனின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கானை வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டார். இருப்பினும், சில காரணங்களால் படம் அடுத்தகட்டத்திற்கு செல்ல தவறியது. மேலும் ஏஆர் முருகதாஸ் தனது மற்ற படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது அந்த கதையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ப்ரீபுரடக்சன் பணிகள் தீவிரமாகா நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்த கதையை ஹிந்தி ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதத்தில் கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறார். இந்த படத்தில் மிருணால் தாக்கூர் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், இப்படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகளை இயக்குனர் முடித்ததும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக 2020ல் ‘தர்பார்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்திற்கு பிறகு விஜய்யுடன் நான்காவது முறையாக இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது, ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடனான வேறுபாடுகளை காரணம் காட்டி ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் 3 வருடங்களாக ஸ்கிரிப்ட் வேளையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் படம் தயாரிப்பிலும் மும்முரம் காட்டி வருகிறார். மறுபுறம், சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாய் பல்லவி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அயலான் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் 2024ல் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படம் வெளியாக இருந்த நிலையில், சிஜி பணிகள் காரணமாக படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிபோகிறது. அயலான் படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளது. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம், ரவிதேஜாவின் கழுகு, நாகார்ஜுனாவின் சாமி ரங்கா மற்றும் அனுமான் ஆகிய படங்களுடன் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மோதவுள்ளது. சிறந்த தரமான வெளியீட்டிற்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால், தயாரிப்பாளர்கள் தாமதத்திற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.
R. ரவிக்குமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு அயலான் படம் தொடங்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அயலான் உருவாகி உள்ளது. இந்த படம் முதலில் 2021ல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் காலவரையின்றி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அயலான் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் சிஜி காரணமாக மீண்டும் தாமதம் ஆனது. இப்போது, இறுதியாக, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அயலான் ஜனவரியில் வெளிவர உள்ளது.