Friday, May 17, 2024

சர்ச்சையை கிளப்பிய சவுக்கு சங்கர்… நிவேதா பெத்துராஜ் பதிலடி – என்ன விஷயம்?

Nivetha Pethuraj Issue: தன்னை குறித்து அவதூறான கருத்துகள் அடங்கிய வீடியோ பரப்பப்பட்டு வருவதற்கு, நடிகை நிவேதா பெத்துராஜ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

by Talks Tamil
0 comment 29 views

Nivetha Pethuraj Issue: சமூக வலைதளங்களில் பிரபலமானவராக அறியப்படும் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சில நாள்களாக வைரல் ஆகி வந்தது. அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், நடிகை நிவேதா பெத்துராஜ் குறித்தும் சில ஆட்சேபனைக்குரிய சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியிருந்தார், மேலும் அதுசார்ந்த எந்த ஆதாரங்களும் வைரலான அந்த வீடியோவில் காட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த சவுக்கு சங்கரின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்து, அதுசார்ந்த விளக்கத்தையும் அளித்துள்ளார். மேலும், இந்த பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரையோ அல்லது சவுக்கு சங்கரின் பெயரையோ நிவேதா பெத்துராஜ் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பதிவில் பரப்பரப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னர் அதனை பதிவிடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

20 வருடங்களுக்கும் மேல்…

நிவேதா பெத்துராஜ் அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், “சமீபகாலமாக எனக்கு சிலர் பணம் தாராளமாக செலவிடப்படுவதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த செய்தியை பரப்புவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு முன், அந்த தகவல் குறித்த உண்மையை சரிபார்க்கும் அளவிற்காவது மனிதாபிமானம் இருக்கும் என்பதற்காக இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.

நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம், இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் சற்று சிந்தியுங்கள். நான் மிகவும் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவள். நான் எனது 16 வயதில் இருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும், நல்ல நிலையிலும் இருக்கிறேன். எனது குடும்பம் இன்னும் துபாயில்தான் வசிக்கிறது. நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வசித்து வருகிறோம்.

கார் பந்தயம்…

திரையுலகில் கூட, நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ, ஹீரோவிடமோ பட வாய்ப்பு தரும்படி கேட்டுக்கொண்டதில்லை. நான் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன், அதன்படியே நான் தொடர்ந்து நடித்தேன். நான் எப்போதும் வேலைக்காகவோ அல்லது பணத்திற்காகவோ பேராசை கொள்ள மாட்டேன்.

என்னைப் பற்றி இதுவரை பேசப்பட்ட எந்தத் தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். 2002ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். மேலும், 2013ஆம் ஆண்டு முதல் எனது கார் பந்தயம் மீது பெரும் விருப்பம் கொண்டு அதில் ஈடுபட்டு வருகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், சென்னையில் நடத்தப்படும் கார் பந்தயங்கள் பற்றி எனக்கு தெரியவே தெரியாது.

பத்திரிகையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீங்கள் சொல்லக்கூடிய அளவுக்கு நான் முக்கியமானவள் இல்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, நான் இறுதியாக மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போலவே, நானும் தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன்.

நான் இதை சட்டரீதியாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளது. அவர்கள் என்னை அந்தளவிற்கு அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

ஒரு குடும்பத்தின் நற்பெயரைக் கெடுக்கும் முன், நீங்கள் பெறும் தகவல்களைச் சரிபார்க்கவும். எங்கள் குடும்பத்தை இனி எந்தக் காயங்களுக்கும் ஆளாக்க வேண்டாம் என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவராக இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

(இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. Tamilan Talks இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை.)

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x